தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் – டிஎஸ்பி உத்தரவு!
தமிழகம் – கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதி வழியே தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ – பாஸ் கட்டாயம் என ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். மேலும் இ – பாஸ் இல்லாமல் தமிழகம் வரும் வாகனங்களை சோதனை செய்து, அவை திரும்ப அனுப்பப்பட்டு வருகின்றன.
இ-பாஸ் கட்டாயம்:
கொரோனா முழு ஊரடங்கில் இருந்து தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், போக்குவரத்துக்கான தடை நீடித்து வருகிறது. அந்த வகையில் மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டவுடன், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இ-பதிவுடன் பயணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளி மாநிலத்தை சேர்ந்த வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என ஓசூர் மாவட்ட டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1,6 & 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கை & கல்விக்கட்டணம் வசூல் – அமைச்சர் விளக்கம்!
இதை தொடர்ந்து தமிழகம் – கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில், இ-பதிவுகள் இல்லாமல் வரும் வாகனங்களை சோதனை செய்து, அவற்றை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஓசூர் ஜுஜுவாடி எல்லையில் நடைபெற்று வரும் வாகன சோதனையை, ஓசூர் டிஎஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
இ-பதிவு இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் சானிடைசர் கொடுப்பது, கைகளை சுத்தப்படுத்தும் பணிகள், தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்ப அளவீடு செய்யும் பணிகள் சுகாதார பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்பே அவை உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.