நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல ‘இ-பாஸ்’ கட்டாயம் – புதிய அறிவிப்புகள் வெளியீடு!
கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், தமிழகம் வருவதற்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கட்டுப்பாடுகள் ஏற்கனவே தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இ-பாஸ் கட்டுப்பாடு:
தமிழகத்தில் கொரோனா பேரலை கட்டுப்பாடுகளாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தற்போது ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் இருந்து மேலும் சில கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு விகிதமானது சரிவை கண்டுவந்ததன் அடிப்படையில் பொது முடக்கமானது தொடர்ந்து நீடிக்கப்பட்டு, சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது.
தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
அந்த வகையில் அத்தியாவசிய சேவைகள், மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், சலூன் கடைகள், பார்கள், பூங்காக்கள் மற்றும் பேருந்து போக்குவரத்து என பல கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. எனினும் கல்வி நிறுவனங்களை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இதனிடையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயமாக்கப்பட்டிருந்த இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதாவது தமிழகத்தில் ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுகளில் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கான இ-பதிவு நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளது. எனினும் சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல விரும்புபவர்கள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை பெற்றிருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.