தமிழகத்தின் 5 பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தின் 5 பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் 5 பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - அரசு அறிவிப்பு!
தமிழகத்தின் 5 பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவை பல்வேறு கூடுதல் தளர்வுகள் உடன் ஜூன் 21ம் தேதி வரை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நீட்டித்துள்ள நிலையில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் அவசியம்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் சற்றே குறைந்த நிலையில் இருக்கும் போதிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஜூன் 14ம் தேதி வரை அறிவித்திருந்த ஊரடங்கை தமிழக முதல்வர் ஜூன் 21ம் தேடி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் முன்னர் இருந்த தளர்வுகளுடன் சலூன் கடைகள், டாஸ்மாக் திறப்பு போன்ற தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – அரசாணை வெளியீடு!!

கடந்த ஊரடங்கு அறிவிப்பில், சில குறிப்பிட்ட பணியாளர்கள் இ-பதிவு செய்து பயணிக்கும் சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் இம்முறையும் தொழிலாளர்கள் இ-பதிவு செய்து பயணிக்கலாம். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் ஆகிய 5 இடங்களுக்கு செல்வதற்கு மட்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவை சுற்றுலா தலங்களாக உள்ளதால் பொதுமக்கள் இங்கு சுற்றுலா நோக்கத்திற்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதி அல்லது அவசர தேவை போன்ற காரணங்களை குறிப்பிட்டு அதிக அளவிலானவர்கள் சுற்றுலா செல்பவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இ-பதிவு மாற்றும் இ-பாஸ் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளது. இ-பதிவு என்பது இணையத்தில் நமது விவரத்தை பதிவு செய்து விட்டு வெளியில் பயணிப்பது. இதற்கு அரசு சார்பில் நேரடி ஒப்புதல் பெற தேவை இல்லை. ஆனால் இ-பாஸ் பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பித்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். காவலர்களின் சோதனையில் இ-பாஸ் செய்த ஆவணத்தை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். ஆதலால் இ-பதிவு செய்து விட்டு அந்த குறிப்பிட்ட 5 இடங்களுக்கு செல்ல முடியாது. அவசியம் இ- பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!