தமிழகத்தில் மே 24 முதல் இ-பதிவில் புதிய நிபந்தனைகள் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே 24 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு
மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததன் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் மே 24 வரை 2 வாரங்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சேவைகள், வணிக வளாகம், அலுவலகங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அனைத்து கடைகளும் 7 நாட்கள் மூடல் – அரசு உத்தரவு!!
தவிர உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. தவிர மாவட்டத்துக்கு இடையேயான பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அவசர தேவைகள் காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டும் இ-பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து கடந்த வாரம் தீவிரப்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது இ-பதிவு நடைமுறையில் இருந்து திருமணத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில்லா ஊரடங்கு காரணமாக இ-பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தவிர மருத்துவம் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு மூலம் அனுமதி கொடுக்கப்படும்.