தமிழகத்தில் ஜூன் 7 முதல் இ-பாஸ் உடன் அனுமதிக்கப்பட்ட பணிகள் – முழு விபரம்!
ஜூன் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் எந்தெந்த செயல்பாடுகளுக்கெல்லாம் இ-பாஸ் உடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கானது தற்போது ஜூன் 14 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு வீதமானது மாநிலம் முழுவதும் குறைந்து வந்தாலும், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு நிலை அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதனால் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மேலும் 1 வாரத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்தது.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு – அரசு உத்தரவு!
ஜூன் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 7 ஆம் தேதி முதல் தினசரி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல போக்குவரத்து சேவைகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவசிய பணிகளுக்காக மட்டும் இ பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இ பதிவு நடைமுறையுடன் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளின் அடிப்படையில்,
TN Job “FB Group” Join Now
- நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க விரும்புபவர்கள், அம்மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள், அது தொடர்பான பணிகளுக்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பொது மக்கள் அனைவரும் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்க வேண்டும் எனவும், வாகனங்களில் செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.