மின் கட்டண எண்ணுடன் ஆதார் இணைப்பு – முடங்கிய இணையதளம்.. பயனர்கள் அவதி!
தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மின் வரிய இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணை இணைக்கும் போது சிக்கல் எழுவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆதார்- மின் இணைப்பு எண்:
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான மானிய விலை மின்சாரம் தொடரும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மின் வாரியத்தை டிஜிட்டல் மையமாகும் முறையிலும் மின்வாரியத்துறை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மின் பயனர்கள் மாதாந்திர மின் கட்டணத்தை மின்வாரிய செயலி மற்றும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகள் வாயிலாக செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண் கேட்கப்படுவதாக பயனர்கள் கூறுகின்றனர்.
TNUSRB PC 2022 தேர்விற்கு படிப்பவரா? Best Online Classes!! உடனே Join செய்யுங்கள்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஏற்கனவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பேரில் ஆதார் எண்ணை ஆன்லைனில் இணைக்க முயற்சிக்கும் போது சர்வர் குறைபாடு ஏற்படுவதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தற்போதைக்கு ஆதார் எண்ணை இணைக்காமல் கட்டணம் செலுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.