மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நிலுவை தொகை – முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிலுவை தொகை
கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நிலைமை சரியான நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் 3 மாதம் நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு மட்டுமல்ல 18 மாத அரியர் பே (arrear pay) தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் AICP index குறைந்தபட்சம் 4% அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தெரிவித்துள்ளது. அதன் படி அகவிலைப்படி 38 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிதாக 6 அப்டேட்கள் அறிமுகம்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை மாற்றியமைக்கப்படுகிறது. அதன் படி ஜனவரி முதல் ஜூன் வரையிலும், இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலமாக நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகையை மத்திய அரசு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.