தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆட்சியர்களுக்கான முக்கிய உத்தரவு – மக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கும் அதிரடியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு தீவிரமாக பரவி கொண்டிருப்பதை ஒட்டி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்களை கண்டிப்பாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் கொரோனா பரவலை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், பொது இடங்களுக்கு மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 வரைக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு – முழு விவரம் இதோ!
இந்நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், மால்கள், பொது கூட்டங்கள், அரசு விழாக்கள் முக்கியமாக 10 பேர் கூடும் இடமாக இருந்தாலும் கூட கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், பொதுமக்களுக்கு நோய் தொற்றிற்கான சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்க அதிகரிக்க கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படும் அளவிற்கு தொற்று இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.