சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை – காவல்துறை உத்தரவு!

0
சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை - காவல்துறை உத்தரவு!
சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை - காவல்துறை உத்தரவு!
சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை – காவல்துறை உத்தரவு!

உலக நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு இந்த முறை இந்தியாவில் புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது. அதன் தொடக்கவிழா நடக்கும் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜி-20 மாநாடு:

உலக நாடுகள் கலந்து கொள்ளும் ஜி-20 மாநாடிற்கு இந்த முறை இந்தியா தலைமை தாங்குகிறது. நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் புதுச்சேரியில் இன்று (ஜன. 30) முதல் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இன்றைய தினம் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகை தர இருக்கின்றனர்.

6,000 ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம் – பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Follow our Instagram for more Latest Updates

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்த மாநாடு காரணமாக புதுச்சேரி நகரம் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . மேலும் 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஜி – 20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் துவக்க நிலை மாநாடு வருகிற ஜன . 31 மற்றும் பிப். 1 ஆகிய தேதிகளில், மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் பாதுகாப்பு கருதி, இன்று முதல் 3 (பிப் .2 வரை) நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!