மத்திய அரசில் உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் பணி – 2659 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் எனும் Assistant Rural Development Officer பணிக்கு என டிஜிட்டல் சிக்ஷா மற்றும் ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் (DSRVS) அமைப்பில் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பில், இப்பணிக்கு என 2659 காலிப்பணியிடங்கள் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, விருப்பமுள்ளவர்கள் (20.04.2022ம் தேதிக்குள்) இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
DSRVS காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் எனும் Assistant Rural Development Officer பணிக்கு என்று மொத்தமாக 2659 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
Central Government Job கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் (10+2) 12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DSRVS வயது விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Central Government Job விண்ணப்ப கட்டணம்:
Gen / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 மற்றும் SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.350 என விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
DSRVS தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Central Government Job ஊதியம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு தகுதிக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DSRVS விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 20.04.2022 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க கேட்டுக் கொள்கிறோம்.