தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை – உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை - உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை - உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை – உறை பனிக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில் இன்றும் , நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் . அதே போல பிற மாவட்டங்களில்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌ என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில்‌ மட்டும் இரவு நேரங்களில்‌ உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

2023 – 2024ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் – வருமான வரியில் மாற்றம்.. வெளியான முக்கிய தகவல்!

அதனை தொடர்ந்து ஜன. 7, 8 ,9ம் தேதிகளில் வரை தமிழகத்தின் தென், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும்‌ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. அத்துடன் மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ ஜன. 6, 7ம் தேதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!