தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை – முதல்வர் ஸ்டாலின் கவலை!
தமிழகத்தில் அதிகமாக குற்ற செயல்கள் நடந்து வரும் நிலையில் போதை பொருள்கள் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என முதல்வர் அறிவித்துள்ளார்.
போதை பொருள்கள் விற்பனை:
தமிழகத்தில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அனைத்து அசம்பாவித சம்பவத்திற்கும் போதை பொருள்கள் பயன்பாடு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் போதைக்கு அடிமையாகி இருக்கும் அவல நிலை இருக்கிறது. இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 10 ) ஆலோசனை மேற்கொண்டார்.
Exams Daily Mobile App Download
அதில் அவர் பேசுகையில் கடந்த ஆட்சியில் போதை பொருள்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மாநிலத்தில் போதை பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மிகவும் மோசமான செயல் என்பதால் மிகவும் வேதனை அளிக்கிறது. போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனாலும் குஜராத், மஹாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்துவது குறைவு என்பது ஆறுதலாக இருக்கிறது.
ஐயப்பன் கோவில் பிரசாதம் குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு தகவல்
தமிழகத்திற்குள் போதை பொருள்கள் நுழைவதை தடுக்க நாம் அனைவரும் முன் வர வேண்டும். மக்களிடம் போதை பொருள்களை தடுக்காமல் இருந்தால் நாட்டின் எதிர்காலம் மோசமாகிவிடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும், பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களை கண்காணிப்பது கட்டாயம் ஆகும்.