நாட்டில் மருந்து உற்பத்தி மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் – மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!
இந்தியாவில் மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆய்வகங்களுக்கு அனுமதி:
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில அரசின் மூலம் நியமனம் செய்யப்படும் தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகின்றன. அவ்வாறு ஆய்வு செய்யும் போது போலி மருந்துகள் கண்டறியப்படும். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்காக வெளியான ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம் – 7.5 % வட்டி!!
அந்த வகையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது நாடு முழுவதும் மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 5 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வகங்கள் மூலம் மருந்து உற்பத்தி நடவடிக்கை, மூலக்கூறு விகிதம் மாறுபாடு, தரக் குறைபாடு இருந்தால் ஆய்வகம் மூலம் மதிப்பீடு செய்யப்படும் அதன் படி மருந்து கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.