பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைவு? மத்திய அரசு பதில்!
நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதா என பாராளுமன்ற மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இடைநிற்றல்:
நாடு முழுவதுமே ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கான இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட வறுமையின் காரணமாக சில மாணவ, மாணவியர்களால் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், கொரோனா காலத்தின் போதே பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியர்களுக்கான இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் பள்ளி மாணவர்களுக்கான இடைநிற்றல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதாவது, பாராளுமன்ற மக்களவையில் கொரோனா பரவலை தொடர்ந்து ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதா என உறுப்பினர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
Reliance Jioவின் 30 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரங்கள் இதோ
இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் படித்து வரும் பள்ளி மாணவ, மாணவியர்களின் இடைநிற்றல் விகிதம் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.