ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
சட்டசபை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளதால், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சூலூர் இராணுவ விமானப்படைத் தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன் பறக்க தடை
தமிழகத்தில் சட்டசபை துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதத்திலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தை திறக்கும் விழாவும் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆகஸ்ட் 4 கடைசி தேதி – ஆட்சியர் அறிவிப்பு!
இந்நிகழ்வினை தொடர்ந்து அவர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை சூலூர் இராணுவ விமானப்படைத் தளத்திற்கு வருகை தருவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை (ஆக்ஸ்ட் 3) நீலகிரி மாவட்டத்தில் நடைபெரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானநிலையம் வர உள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதனால் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒரு பகுதியாக சூலூர் விமானம் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி அப்பகுதிகளில் டிரோன்களின் செயல்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.