ராமநாதபுர மாவட்டத்தில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை – கடற்படை எச்சரிக்கை!!
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள பகுதிகளில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை செய்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் உள்ள ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு எச்சரிக்கை செய்தியினை கடலோர காவல்படையினர் வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மருத்துவ கல்லூரிகள் திறப்பு – ஆளுநர் தகவல்!!
கடற்படை தளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மீறி ஆளில்லாத விமானங்கள் இயக்கப்பட்டால் எந்த வித முன்னறிவுப்பு இன்றி அந்த விமானங்கள் தகர்க்கப்படும். அதே போல் அந்த விமானங்கள் பறிமுதலும் செய்யப்படும். அதனை இயக்கியவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால் யாரும் தடை உத்தரவினை மீறி ட்ரோன்களை பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.