இலவச பேருந்து திட்டத்தால் பெண்களை அவமதிக்கும் ஓட்டுனர்கள் – போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இலவச பேருந்து பயணத்தில் பெண்கள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் சில ஓட்டுனர்கள் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாக எழுந்த புகாரின் பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலவச பேருந்து திட்டம் :
தமிழகத்தை போலவே பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இலவச அரசு பேருந்து திட்டத்தினால் லட்சக்கணக்கான பெண்கள் நாள் ஒன்றுக்கு பயன் பெற்று வருகின்றனர். ஆனால், பெண்கள் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் சில ஓட்டுனர்கள் பேருந்து நிறுத்தாமல் செல்வதும், பெண்கள் நிற்கும் இடத்தை தாண்டி பேருந்து நிறுத்துவது போன்ற பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்தில் இலவசமாக பெண்கள் பயணம் செய்வதால் பெண்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்ட அதாவது, பெண்களுக்கு பேருந்து நிறுத்தாமல் செய்யும் செல்லும் ஓட்டுநர் மற்றும் பெண்களை மரியாதை குறைவாக பேசும் ஓட்டுநர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.