வாகன ஓட்டிகளே.. இனி உங்களுக்கு திண்டாட்டம் தான் – இதை செய்வதற்கு ரூ. 8 லட்சம் கட்டணம்!
இந்தியாவில் ஒவ்வொரு வாகனங்களையும் அடையாளம் காண்பதற்கு பதிவெண் வழங்கப்படுகிறது. இந்த பதிவெண்ணை நீங்கள் பேன்சி நம்பராக பெற புதிய கட்டணம் ஒன்றை போக்குவரத்துறை நிர்ணயம் செய்துள்ளது.
பேன்சி நம்பர்
இந்தியாவில் ஒவ்வொருவரின் வாகனங்களை அடையாளப்படுத்த பதிவெண் என்பது கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு வாகனமும் அடையாளம் காண்பது என்பது எளிதாகிறது. இந்த பதிவெண்கள் கொண்டு தான் குற்றச் சம்பவம், வாகன திருட்டு, முறைகேடு ஆகியவையும் கண்டறியப்படுகிறது. அத்துடன் இந்த பதிவெண் ஆனது வாகனத்தின் முன்பும், பின்பும் நம்பர் பிளேட் மூலமாக ஒட்டப்படுகிறது. இந்த நம்பர் வழங்கும் பணியை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த பதிவெண்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு எழுத்து மற்றும் நம்பர்களுக்கும் ஒரு காரணம் உள்ளது. இதில் முதல் 2 எழுத்துக்கள் அந்தந்த மாநிலத்தை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது தமிழகத்திற்கு TN என்றும் கேரளாவிற்கு KL என்றும் குறிப்பிடப்படுவது வழக்கமாகும். இதற்கு அடுத்துள்ள எண்கள் ஆர்டிஓ-வின் அலுவலக எண்களை குறிக்கும். இந்த எண்களை தொடர்ந்து உங்களின் வாகனத்திற்கான தனித்துவம் வாய்ந்த பதிவெண்கள் வழங்கப்படும். இதில் ஆங்கில எழுத்துகள் (A,B,C,D) மற்றும் நம்பர்கள் இடம் பெற்றிருக்கும்.
போடு.. வேற லெவல்.. தமிழக மக்களுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த அரசு.. கடன்கள் அதிரடி தள்ளுப்படி!!
Exams Daily Mobile App Download
தற்போது தங்களின் மொபைல் எண்ணில் இருந்து, வாகனங்களின் பதிவெண் வரை கண்களை கவரும் வகையில் விரைவில் மறக்க முடியாத பேன்சி நம்பர்களை பெற வேண்டும் என பெரும்பாலானோர் விரும்புகின்றனர். தற்போது இந்த பேன்சி நம்பர்களை பெறுவதற்கான புதிய கட்டணம் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்களின் வாகனத்திற்கான பேன்சி நம்பர்களை வாங்க விரும்பும் நபர்கள் ரூ.8 லட்சத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்