தென் சென்னையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தென் சென்னையில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளுக்கும் (செப் 24, 25) ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் சுத்திகரிக்கும் பராமத்து பணிகள் நடைபெற இருப்பதால் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடிநீர் விநியோகம்:
சென்னையை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றும் விதமாக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை (வெள்ளி) காலை 6 மணி முதல், நாளை மறுநாள் (சனி) காலை 10 மணி வரை இரண்டு தினங்களுக்கு பராமத்து பணிகள் நடைபெற உள்ளது.
நவ.1 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு – ஏற்பாடுகள் தீவிரம்!
இதனால் தென் சென்னையில் உள்ள திருவான்மியூர், வேளச்சேரி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு (செப் 24, 25) குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் தென் சென்னையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முன் எச்சரிக்கையாகவே வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணம் – மத்திய அரசு!
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915.