சென்னை ஆவின் பால் நிறுவனத்தில் குடிநீர் திட்டம்? முக்கிய தகவல் வெளியீடு!
சென்னையில் மாதவரம் பால் பண்ணையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் குடிநீர் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளன. மேலும், குடிமக்கள் வசதிக்காக 3 அளவுகளில் ஆவின் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இது பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் நிலையம்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள், தொழில் மையங்கள் போன்றவைகள் அதிகம் தனியார் பால் நிலையங்களையே சார்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக பல தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனத்துக்கு என்று மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாராகும் ஐஸ்கிரீம், குல்பி, நெய், இனிப்பு போன்றவைகள் அதிகளவில் விற்பனை ஆகின்றன. மேலும் தனியார் பால் நிறுவனங்களை விட விலை குறைவாகவும் தரம் நிறைந்ததாகவும் இருப்பதால் மக்கள் அதிகம் இந்த பாலையே உபயோகிக்கின்றனர். இந்த நிலையில் ஆவின் மூலம் குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 23 ஆவின் மையங்களில் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள் வழியாக குடிநீர் பாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு நிலைப்பு சான்றிதழ்? வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் தனியார் நிறுவனம் குடிநீர் பாட்டில் 1 லிட்டர் ரூ.20 க்கும், 1/2 லிட்டர் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆவின் நிறுவனத்தில் தனியார் குடிநீர் பாட்டிலை மிக குறைந்த விலையில் விற்க உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதாவது ஆவின் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் குடிநீர் பாட்டில் திட்டத்தை முறையாக செயல்படுத்த எல்லா முயற்சிகளுக்கும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக 3 அளவுகளில் ஆவின் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அதில் 300 மில்லி, அரை லிட்டர், ஒரு லிட்டர் ஆகிய அளவுகளில் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆவின் முடிவு செய்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்