தமிழக பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆடை கட்டுப்பாடு – வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளில் ஆடை கட்டுப்பாடு முக்கிய அங்கம் வகிக்க உள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மீது ஆன்லைன் வகுப்பு குறித்த புகார்கள் எழுந்ததை தொடர்ந்து ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து 7 பேர் கொண்ட ஒரு குழு ஒன்றை அமைத்து ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை வகுக்க அரசு கூறியுள்ளது.
முன்களப்பணியாளர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பபட உள்ளது. அரசின் விதிமுறைகளில் ஆடை கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பின் போது மிகவும் கண்ணியமான முறையில் ஆடை அணிய வேண்டும். மற்றவர்களை ஈர்க்கும் வகையிலான, கிண்டல் செய்யும் வகையிலான ஆடைகளை அணிய கூடாது.
TN Job “FB Group” Join Now
பள்ளியில் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளும் போது எப்படி நடந்து கொள்வாரோ அதே போன்று நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஆடைகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் ஒழுக்கமான முறையிலான ஆடைகளை அணிவதை உறுதி செய்ய வேண்டும். சாய்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்க கூடாது. மாணவ – மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கேமராவை சரியான முறையில் வைக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகள் குழுவிற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்த அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.