சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்துள்ளது. கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தங்க விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்போதும் தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது.
இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!
அதாவது சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்