சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்போதும் தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அதனால் உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்துள்ளது. அதனால் தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகும் கூட தினந்தோறும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்து வருகிறது. கடந்த 25ம் தேதி நிலவரப்படி சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்!
அதனை தொடர்ந்து இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயர்ந்து ரூ.4,767-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது இன்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து, ரூ.61.20-க்கும், ஒரு கிலோ ரூ.61,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.