டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்:
தமிழகத்தில் சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த சுதா சேஷையன் அவர்களின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.
இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய திட்டங்கள் குறித்து மூன்றாவது ஆலோசனை கூட்டம் – முதல்வர் விவாதம்!
கடந்த ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்யும். இதற்கான சட்ட மசோதா கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.