மருத்துவ துறையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
திருச்சிராப்பள்ளியில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை (DPHPM) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Account Assistant, DEO ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (31.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DPHPM வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருச்சிராப்பள்ளியில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறையில் காலியாக உள்ள Refrigerator Mechanic, IT Coordinator-LIMS, Data Entry Operator, Account Assistant, MMU-Driver ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Refrigerator Mechanic, Computer Application, Computer Science, Commerce ஆகிய பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 08ஆம் வகுப்பு / IT / BE / B.Tech / Graduation / Post Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.05.2022 ம் தேதியின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
DPHPM விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். நாளை (31.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.