Tokyo Paralympics 2020: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் :
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்திய அணி சார்பில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Tokyo Paralympics 2020: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவானி !!
இன்று ஈட்டி எறிதல் F45 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியாவிற்கு தற்போது இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். தேவேந்திர ஜஜாரியா 64.35 மீட்டர் எறிந்து வெள்ளி வென்றார். இவர் எறிந்த்து 60.28, 60.62,64.35,*,*,61.23 மீட்டர் ஆகும். அதேபோல், சுந்தர் சிங் 64.01 மீட்டர் எறிந்து வெண்கலம் வென்றார். இவர் எறிந்தது 62.26, 60.20, *, *, 64.01, * ஆகும். இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியன் 67.79 மீட்டர் எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
இன்று காலை, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகரா தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு தற்போது ஏட்டி எறிதலில் இந்தாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது. தற்போதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 7 பத்தங்களை வென்று 34ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 47 தங்கம் உட்பட 106 பதக்கங்ளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 24 தங்கம் உட்பட 62 பதக்கங்களுடன் உள்ளது.