மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் டபுள் ஜாக்பாட் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரே நேரத்தில் அகவிலைப்படி உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு இரு முறையாவது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வது வழக்கம். எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயரும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கும் போது வீட்டு வாடகைப்படியும் உயர்த்துவது வழக்கம். சம்பள உயர்வு கிடைத்தால் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கொரோனா காலகட்டத்தில் தான் 28% ஆக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31% ஆக இருந்தது. இதற்கு பிறகு மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் 3% அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் வீட்டு வாடகைப் படியும் 27 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் தங்கியிருக்கும் X, Y, Z நகரங்களுக்கு ஏற்றவாறு வீட்டு வாடகைப் படி உயர்வு தொகை கிடைக்கும். X வகை நகரங்களுக்கு 27% வீட்டு வாடகைப் படியும், Y வகை நகரங்களுக்கு 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வீட்டு வாடகைப் படியும், Z வகை நகரங்களுக்கு 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வீட்டு வாடகை படியும் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி உயர்வு கிடைப்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.