மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – விரைவில் 5% அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு?

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் - விரைவில் 5% அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் - விரைவில் 5% அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் – விரைவில் 5% அகவிலைப்படியுடன் ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் 5% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய சம்பள அதிகரிப்பை பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் PF வட்டி பணம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஊதிய உயர்வு

சமீபத்தில் 34% அகவிலைப்படி உயர்வை பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உண்மையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உட்பட 3 பெரிய பரிசுகள் கிடைக்க இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் பரிசாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மீண்டும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இரண்டாவது பரிசாக, டிஏ நிலுவையை வழங்குவது குறித்து அரசுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது. மூன்றாவதாக வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் வட்டிப் பணம் இந்த மாத இறுதிக்குள் வரலாம்.

TN Job “FB  Group” Join Now

இதில் DA அதிகரிப்பு AICPIன் தரவைப் பொறுத்து அமையும். அந்த வகையில் மார்ச் 2022ல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் அகவிலைப்படியை (DA) 3 அல்லது 5 சதவீதமாக அதிகரிக்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 27 ஆயிரத்திற்கு மேல் உயரலாம். இது தவிர, கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை வழங்குவது குறித்த விவகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி, அனைத்தையும் பார்த்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதனால் இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படலாம். இதனை தொடர்ந்து ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 7 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு வட்டி செலுத்துவது பற்றிய நல்ல செய்தி வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் PF கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் வட்டிப் பணம் மாற்றப்படலாம். ஏனெனில் இதுவரை கிடைத்த தகவலின்படி, PF கணக்கீடு செயல்முறைகள் முடிவடைந்துள்ளதாகவும், இந்த முறை 8.1% படி PFன் வட்டிப் பணம் கணக்கில் வரும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!