கூட்டுப் பட்டங்கள் வழங்குவது குறித்து – யுஜிசி கருத்துக் கேட்பு!!
இரட்டை மற்றும் கூட்டு பட்ட படிப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவரிக்கையை யூஜிசி தயாரித்துள்ளது. இதனை மக்களின் கருத்து கேட்புக்காக வைத்துள்ளது. இதற்கு மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
யூஜிசி வழங்கியுள்ள விதிமுறைகள்:
யூஜிசி அமைப்பானது தற்போது இரட்டை மற்றும் கூட்டு பட்ட படிப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அடங்கிய வரைவரிக்கையை வடிவமைத்துள்ளது. இந்த வரைவரிக்கையில் கூறப்பட்டதாவது, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பட்ட படிப்புகளை வழங்குதல், அந்த நிறுவனங்களுடன் இணைத்து நிறுவன அங்கீகாரம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணாக்குகிறோம் – ஆய்வு முடிவுகள்!!
இது இப்படியாக இருந்தாலும், இந்த விதிகள் தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் பட்ட படிப்புகளுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. NAAC என்ற தேசிய தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தலைசிறந்த முதல் 100 இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த பட்ட படிப்புகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்க அந்தந்த நிறுவனங்கள் யூஜிசி அமைப்பிடம் உரிய அனுமதியினை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக இந்த வரைவறிக்கையை யூஜிசி அமைப்பு மக்களின் கருத்து கேட்புக்காக வைத்துள்ளது. இதன் மூலமாக மக்கள் இது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பொது மக்கள் மார்ச் 15-ம் தேதி வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்