இந்தியாவில் 3ஆவது அலை தொடங்கி விட்டதா ? – அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் அறிகுறியாகும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவர் கூறியுள்ளார்.
மூன்றாம் அலை கொரோனா :
இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை பரவி மக்களை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இரண்டாம் அலை எதிர்பாராத அளவு பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையானது அனைத்து வயதினரயும் தாக்கி உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆப்கானில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய அமெரிக்க படைகள் – கொண்டாட்டத்தில் தலிபான்கள்!
இதன் விளைவாக கடந்த மாதம் தொற்று பரவல் குறைந்தது. இந்த நேரத்தில் அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கில் ஓரு சில தளர்வுகளை அளித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கொரோனா மூன்றாம் அலை ஆரம்பத்தின் அறிகுறி என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர் , கொரோனா மூன்றாம் அலை வருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருப்பதாக நினைக்கக்கூடாது, இப்போதே சில மாநிலங்களில் அறிகுறிகளை காண முடிகிறது. இனி வரும் பண்டிகை காலங்களின் போது,நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாவிட்டால் பண்டிகைகள் என்பது கொரோனா வைரஸ் சேகரிப்பு மையமாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.