பள்ளி மாணவர்களிடையே தீவிரமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் – மருத்துவர்கள் எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும் தக்காளி காய்ச்சல் என்னும் நோய் பள்ளி மாணவர்களிடையே தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தக்காளி காய்ச்சல் பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்ததும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மும்பையில் கை-கால் மற்றும் வாய் நோய்( HFMD) மற்றும் தக்காளி காய்ச்சல் தீவிரமாக பரவி கொண்டிருக்கிறது. மேலும், இந்த காய்ச்சலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் மும்பையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மும்பையில் உள்ள பள்ளிகள் முழுவதிலும் HFMD நோயின் மாறுபாடு மற்றும் தக்காளி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த நோய் 7 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக பாதிப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். HFMD நோயில் காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், வாய் புண், பசியின்மை ஆகிய அறிகுறிகள் தென்படும். ஆனால், தற்போது குழந்தைகளை தாக்கி கொண்டிருக்கும் தக்காளி காய்ச்சல் நோய் HFMD நோயின் மாறுபாடாகும். மேலும், தக்காளி காய்ச்சல் வந்த குழந்தைகளுக்கு தோலில் உள்ள தடிப்புகள் செர்ரி சிவப்பு நிறத்தில் மாற்றமடைகிறது.
தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அப்டேட்!
மேலும், HFMD நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சில குழந்தைகளுக்கு கூட காய்ச்சல் இருக்காது. ஆனால், தக்காளி காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கிறது. ஆனால், மருத்துவர்கள் இந்த நோயை கண்டு பயப்பட தேவையில்லை. பயப்படும் அளவிற்கு தக்காளி காய்ச்சல் எதுவும் செய்துவிடாது என அறிவித்துள்ளனர். மேலும், மும்பையில் உள்ள பள்ளிகளில் ஒரு மாணவனிடம் இருந்து மற்ற மாணவனுக்கு தக்காளி காய்ச்சல் பரவி விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்