வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? ரூ.25 லட்சம் உத்தரவாதமில்லா கடன் – வெளியான தகவலால் பரபரப்பு!
சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் குறிப்பிட்ட திட்டம் குறித்து போலியான தகவல்கள் பரவி வருகிறது. இதனை கவனித்த மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதற்கான உரிய விளக்கத்தை அளித்துள்ளது.
ரூ.25 லட்சம் கடன்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் எப்போதுமே நாட்டின் மக்களுக்கு உதவும் வகையிலும், அவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதை ஊக்குவிக்கும் வகையில் பல புதிய நல்ல பலனுள்ள திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவ்வகையான திட்டங்களில் சில சலுகைகளையும் பெண்களுக்கு அளித்து வருகிறது. இதனால் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் பெண்கள் அரசின் திட்டங்கள் மூலமாக சுயமாக தொழில் செய்து அதில் ஜெயித்து வருகின்றனர்.
பெண்களின் முன்னேற்றம் என்பது நாட்டில் வளர்ச்சி பாதையை காட்டுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது யூடியூப் சேனல்கள் என்பது அதிக அளவில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை தனியாக யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். அதிக சேனல்கள் இருக்கும் பட்சத்தில் தங்களுக்கான பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். இவற்றை மக்களும் நம்பி விடுகின்றனர்.
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை – வாகன ஓட்டிகள் கவலை!
Exams Daily Mobile App Download
இதேபோல், தற்போது மத்திய அரசின் ‘நாரி சக்தி யோஜனா’ திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி பெண்களுக்கு ரூ.25 லட்சம் கடன் வழங்குவதாக பல யூடியூப் சேனல்களில் செய்திகள் பரவி வந்தது. மேலும், இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு பெண்கள் எந்த வித உத்திரவாதத்தையும் வங்கிக்கு அளிக்கவேண்டிய தேவையில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதனை ஆராய்ந்து இது முற்றிலும் பொய்யான தகவல்கள் என்றும், இது போன்ற போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்