நாட்டில் இனிமேல் 2 கப்புக்கு மேல் டீ குடிக்காதீர்கள் – அரசின் வேண்டுகோள்!
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. தற்போது பல நாடுகள் மீண்டும் வரும் நிலையில் அரசாங்கம் நிதி நெருக்கடியினால் சிக்கி தவித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் இனி மேல் 2 கப்புக்கு மேல் டீ குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிதி நெருக்கடி
கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் இன்னும் நிதிநிலைமை மோசமாகவே உள்ளது. அத்துடன் அமெரிக்கா டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 200ஐ தாண்டியுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் உள்ளிட்ட சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது.
சின்னத்திரை பிரபலம் ஆலியா மானசா & சஞ்சீவ் வீட்டில் விசேஷம் – வைரலாகும் வீடியோ!
இதையடுத்து நாட்டில் ஏற்படும் வீண் செலவுகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டில் நிதி நெருக்கடி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரித்துள்ளது. அத்துடன் அரசு அதிகாரிகள் புதிய கார்களை வாங்க கூடாது என்றும் வேறு நாடுகளில் இருந்து புதிய கார்களை இறக்குமதி செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 8.30 மணிக்கு சந்தைகள் மூட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் இக்பால் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் தேயிலை இறக்குமதிக்காக 8000 கோடி ரூபாய் அரசு செலவிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் இது போன்ற வீண் செலவுகளை குறைப்பதன் மூலமாக பொருளாதார நிலையை சீர் செய்ய முடியும் என்றார். அதனால் பாகிஸ்தான் மக்கள் நாள் ஒன்றுக்கு 1 அல்லது 2 கப் என குறைவான அளவே டீ குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.