ஆதாரில் செய்ய கூடாத முக்கிய விஷயங்கள் – உஷார் மக்களே! UIDAI எச்சரிக்கை!
ஆதார் அட்டை நாட்டின் மிக முக்கிய ஆவணமாக மாறியுள்ள நிலையில், இதை கொண்டு நடக்கும் மோசடி செயல்களும் அதிகரிக்க தொடங்கி விட்டது. இதை பற்றி பொதுமக்களை ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.
UIDAI எச்சரிக்கை:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தின் முக்கிய அடித்தளமாக விளங்கும் ஆதாரில் நமது பெயர், வயது, பாலினம், முகவரி, தொலைபேசி எண், கண் கருவிழி, விரல் ரேகை பதிவு, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆதார் அட்டையுடன் நமது மற்ற அடையாள ஆவணம், வங்கி கணக்கு, பான், கேஸ் பதிவு கணக்கு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
11,000 ஊழியர்களை கொத்தாக வீட்டிற்கு அனுப்பிய பேஸ்புக்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய பணி நீக்கம்!
Exams Daily Mobile App Download
இதனால் ஆதார் மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஆவணமாக உள்ளது. மற்றவர்களின் ஆதார் எண்களை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுவது குறித்த புகார்கள் சமீபத்தில் அதிக அளவில் வருகிறது. இதனால் UIDAI ஆனது தற்போது பொதுமக்கள், தங்களின் மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் அல்லது வேறு ஏதேனும் அடையாள ஆவணத்தை எப்படி அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோமோ, அதை போலவே ஆதார் எண்களை பகிர்வதிலும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.