மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக கனிமொழி, என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பு:
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே காலியாக இருந்த ஒரு இடத்திற்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
TNPSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – அறிவிப்பு வெளியீடு!
அதனால் கடந்த மே 7ம் தேதி தங்களது மாநிலங்களவை எம்.பி., பதவியை அனைவரும் ராஜினாமா செய்தனர். அதை தொடர்ந்து அந்த இரண்டு இடங்களும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியான இரு இடங்களுக்கும் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் – ‘இது’ கட்டாயம்!
இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் 2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 22 வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை யும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 27ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.