தமிழக பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்.. அக்.25ம் தேதி விடுமுறை – வெளியான சூப்பர் தகவல்!
தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் அரசு விடுமுறை நாளாகும். இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் தனி போக்குவரத்தின் மூலம் பயணித்த வண்ணம் உள்ளனர். கிட்டத்தட்ட கடந்த மூன்று நாட்களாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மற்றொரு பக்கம் கடை வீதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது தீபாவளி அன்று (அக்.24) மட்டுமே விடுமுறை தினமாக உள்ளது. மறு நாள் வழக்கம் போல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வேலை நாளாகும். அதனால் மக்கள் தீபாவளி அன்று இரவு தங்களது ஊர்களில் இருந்து கிளம்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்போது தான் மறு நாள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து சேர முடியும். ஒரே நேரத்தில் அனைவரும் பயணம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலானது மேலும் அதிகரிக்கக்கூடும்.
36 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ‘LVM-3’ ராக்கெட் – பிரதமர் பாராட்டு!
அதனால் அரசு மக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சொந்த ஊர்களில் இருந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து சேரும் வகையில் அக்டோபர் 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் தீபாவளிக்கு மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை (அக்.25) அன்று விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ள நிலையில அடுத்ததாக அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.