தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு இந்த இடங்களில் சிறப்பு ரயில்கள் – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 11ம் தேதி மற்றும் நவம்பர் 8ம் தேதி வரை இயக்கப்பட உள்ள ரயில்கள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்து உறுப்பினர்களுடன் கொண்டாட விரும்புவார்கள். அதனால் பொதுப் போக்குவரத்துகளான பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனால் பயணிகளுக்கிடையே மோதல் கூட ஏற்படக்கூடும். அதனால் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கூடுதலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது! அலர்டா இருங்க!

மேலும் இது தொடர்பாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை-உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூர் இடையிலான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து. இந்த சிறப்பு ரயிலானது அக்டோபர் 11ம் தேதி மற்றும் நவம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் கோவையில் இருந்து அக்டோபர் 11ம் தேதி அன்று காலை 4.40 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை கோரக்பூரை சென்றடைகிறது.

Exams Daily Mobile App Download

இதே போல் கோராக்பூர் – கோவை இடையிலான சிறப்பு ரயில் வருகிற 8ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் ஆனது கோரக்பூரில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 3வது நாள் காலை 7.25 மணிக்கு கோவைக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயில் நெல்லூர், விஜயவாடா, நாக்பூர், போபால், கான்பூர் சென்ட்ரல், கஹளிலபாத், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!