தீபாவளி பண்டிகை விற்பனை – இரவும் முழுவதும் கடைகள் திறப்பு.. காவலர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இப்போதே பண்டிகை களை கட்ட தொடங்கி விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக காவலர்களுக்கு டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காவலர்களுக்கு உத்தரவு:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை , டி. நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனம் பங்கேற்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!
அதே போல மதுரை,கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடை தோறும் மக்கள் போட்டி போட்டு கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
தற்போது பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கடை வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அரசு இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. அதனால் கடைகள் முழுவதும் விற்பனைக்காக இரவு முழுவதும் திறந்திருக்கும். இந்த நேரத்தில் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கடை உரிமையாளர்களை எந்த விதத்திலும் தொந்தரவு அளிக்க கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.