தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற அக். 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு:
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற அக். 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையோட்டி பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மக்கள் புது துணி வாங்க கடைகளில் அலைமோதி வருகின்றனர். இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருப்பதால் வெடி கடைகளில் வெடிகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை அன்று வெடி வெடிக்க சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிக்கலாம் எனவும், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – அரசின் அதிரடி நடவடிக்கை! ஊரடங்கு அமல்!
Exams Daily Mobile App Download
தீபாவளி அன்று குறைந்த ஒலியுடன் குறைந்த காற்றுமாசு ஏற்படுத்தக்கூடிய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான நீதிமன்ற அறிவிப்பை மேற்கோள்காட்டி இந்த கட்டுப்பாடுகளை மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை என தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்