அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு – 4% அகவிலைப்படி அதிகரிப்பு!
மத்திய மாநில அரசு ஊழியர்கள் தீபாவளி பரிசு மழையில் நனைகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது அசாம் மாநில அரசு அகவிலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி:
மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசியை கருத்தில் கொண்டு ஒரு நிதியாண்டில் இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2வது முறையாக மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் தனது ஊழியர்களுக்கு 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படியை 4% உயர்த்தி 38% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் முன் தேதியிட்டு கணக்கிடப்படும்.
மேலும் இந்த மாத ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்களின் பண்டிகை உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல்ல இனிய தீபாவளிக்காக DA வரவேற்க வேண்டிய முக்கியமான ஒன்றாக உள்ளது