பண்டிகை கால போலி ஆபர்கள் – காவல்துறை எச்சரிக்கை! அலர்டா இருங்க!

0
பண்டிகை கால போலி ஆபர்கள் - காவல்துறை எச்சரிக்கை! அலர்டா இருங்க!
பண்டிகை கால போலி ஆபர்கள் - காவல்துறை எச்சரிக்கை! அலர்டா இருங்க!
பண்டிகை கால போலி ஆபர்கள் – காவல்துறை எச்சரிக்கை! அலர்டா இருங்க!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் துணி முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்திற்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் போலி இணையதளங்கள் மக்களிடம் பணம் கையாடல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் மோசடி:

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் ஆன்லைன் மூலமாகவும் மக்கள் ஜவுளி, Fridge, வாஷிங் மிஷின், டிவி உள்ளிட்ட அனைத்தையும் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இது போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் நோட்டிபிகேஷனாக வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதில் மோசடி செய்யும் நபர்கள் விளம்பரங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக காண்பிக்கின்றனர். அந்த விளம்பரத்தின் கீழ் லிங்கையும் தருகின்றனர். இதனை நம்பி மக்கள் கிளிக் செய்து பொருட்களை வாங்க புக் செய்து பணத்தையும் கட்டி விடுகின்றனர். பிறகு அந்த லிங்கை ஓபன் செய்தால் மீண்டும் உள்நுழைய முடியாமல் போய் விடுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது.

தமிழ் சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் – சீரியல்களின் நேர மாற்றம்.. முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இது குறித்து மக்களும் புகார் அளித்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி அதற்கு அடுத்தாக புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளது. இந்த பண்டிகை காலங்களில் ஆன்லைன் மூலம் பொருள் விற்பனை மோசடி அதிகமாக இருக்கும். பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மோசடி குறித்து 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் தள்ளுபடி விவரங்களை வாடிக்கையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது முதலில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!