உண்மையான தீபாவளி அரசு ஊழியர்களுக்கு தான்.. அடுத்தடுத்து வெளியாகும் குட் நியூஸ் – பம்பர் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு தற்போது 38% ஆக அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது.
போனஸ்:
இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. பிறகு நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் 3% உயர்த்தப்பட்டு 34% ஆக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேலும் 4% அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது. மேலும் கடந்த மார்ச் மாத நிலவரப்படி 7% ஆக இருந்த பணவீக்கம் தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதே நேரம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) 1.35 சதவீதமாக அதிகரித்தது. அதனால் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது. அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு 38% ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 4% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவையை அதிகரிக்க மத்திய அரசு வைத்த ட்விஸ்ட் – 4ஜி போன்களை விற்க தடை!
Exams Daily Mobile App Download
தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2022 ஜூலை 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஜாக்பாட்டாக ரயில்வேத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடப்பு ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு சமமான உற்பத்தி திறனுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்