மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 5000 – வெளியான பம்பர் அறிவிப்பு!
இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பல வித அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளி போனஸ்:
இந்தியாவில் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பண்டிகை பரிசாக தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. தற்போது அகவிலைப்படி 34% இருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை 4% ஆக உயர்த்தி வருகிறது. ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகாரபூர்வமாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தீபாவளிக்கு அகவிலைப்படி மட்டுமல்ல, போனஸும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு தனது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் எம்.எஸ்.ஆர்.டி.சி சார்பில் சுமார் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகள் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என மொத்தம் 93,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 9% அகவிலைப்படி உயர்வு.. 6-வது ஊதியக்குழு அறிக்கை!
Exams Daily Mobile App Download
இவர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக மகாராஷ்டிரா அரசு ரூ.45 கோடி நிதியை வழங்கியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போனஸ் தொகை விரைவில் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.