இரண்டாவது திருமணத்திற்கு தயாரான தொகுப்பாளினி DD – மாப்பிள்ளை குறித்து அவர் வெளியிட்ட பதிவு!
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக உள்ள திவ்யதர்ஷினி இரண்டாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மாப்பிள்ளை குறித்து DD தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொகுப்பாளினி டிடி:
தமிழில் முன்னணி சேனலான விஜய் டிவி புதுப்புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என மக்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. விஜய் டிவி பிரபலங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. நடிகை நடிகருக்கு மட்டும் இல்லை தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி ஆங்கரான பிரியங்கா, மகாபா ஆனந்த், ஜாக்குலின், ரக்ஷன், பாவனா ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு பின் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஷபானா – வைரலாகும் புகைப்படம்!
இப்படி திறமை வாய்ந்த தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது முன்னணி நடிகர், நடிகர்களை எல்லாம் சிறப்பாக இன்டர்வியூ செய்வார். திவ்யதர்ஷினியின் ‘காபி வித் டிடி’ அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் ஒன்று. விஜய் டிவியில் அதிகம் சம்பளம் பெறும் தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி தனது திறமையான பேச்சால் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இவர் டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்து சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் பழக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் சிறிது நாட்களிலேயே பிரிந்து விட்டனர். அவரின் திருமண பந்த முறிவு மற்றும் முன்னாள் கணவரை பற்றியும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் செய்திகளை பதிவிட்டு வந்தார். தற்போது டிடி அடிக்கடி வெளிநாடு பயணம் சென்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது அந்த உணவு அவருக்கு பிடித்து இருந்ததாகவும் அதை சமைத்தவரை சந்தித்து அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் திவ்யதர்ஷினிக்கு இரண்டாவது திருமணமா? என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.