தமிழகத்தில் ஏப்ரல் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக மக்கள் கொண்டாடும் பொருட்டு இவ்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. இப்பண்டிகை காலங்களில் அம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் மற்ற மாநில மக்களும் வருகை புரிவர். அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை (WFH) தொடருமா?
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனியில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை உள்ளிட்ட கிராம மக்களும் கலந்து கொள்வர். கோயில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் வழிபாடு செய்வர். கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.
தற்போது மத்திய அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விளக்கி கொண்டதை அடுத்து நடப்பாண்டு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வானது தேரோட்டம், இந்த தேரோட்ட விழா ஏப்ரல் 11ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.