தமிழகத்தில் ஜூன் 10 முதல் அரசு சார்பில் மாவட்ட வாரியாக செஸ் போட்டி – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செஸ் போட்டி:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. உலக அளவிலான செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை.
Exams Daily Mobile App Download
இருப்பினும் தற்போது இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்று நோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் 20 பேர் கொண்ட இந்திய செஸ் அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக இருப்பார் என கடந்த மாதம் 2 ஆம் தேதி அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட இந்திய அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நாராயணன், சசிகிரண், விதித் குஜராத்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.50000 உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
இந்த நிலையில் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து செஸ் தொடரை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செஸ் தொடரில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players-ல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.