தமிழகத்தில் நாளை (பிப்.23) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – இப்பகுதி மக்களுக்கு மட்டும்!
தமிழகத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வரும் 23 ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை :
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் தியாகிகள் தினம் என்று முக்கிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு வரும், 23ல் தேர் திருவிழா நடக்கிறது. மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.
அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் . இந்த திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விநாயகர், வடிவாம்பிகை தீர்த்தகிரீஸ்வரர் ஆகிய மூன்று தேர்கள் மீது முத்துகொட்டை, உப்பு, பொரி, மிளகு ஆகிய நவதானியங்களை தூவி வழிபடுவார்கள். இந்த தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் 23 ல் நடைபெற உள்ள தேர் திருவிழா நடக்க உள்ள நிலையில், 23ல் அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில் வரும், 26 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை தினத்தன்று சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.