அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள்:
நாடு முழுவதும் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தொற்றினால் மக்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநிலம் தோறும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 54,069 பேருக்கு கொரோனா – 1,321 பேர் உயிரிழப்பு!
மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் பல அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் மாத ஊதியம் ரத்து செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
வருகிற ஜூலை 1ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால் தான் அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஜூன் மாதத்திற்கான சம்பளம் போடும் போது தடுப்பூசி சான்றிதழையும் கேட்டு பெற வேண்டும் என்று மாவட்டத்தின் அனைத்து கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்கள் மட்டுமின்றி அரசின் தினக்குழு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்ற தகவலை சமர்பிக்கும்படி பல்வேறு துறை தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Repeatedly old news are displayed is wasting my time and irritating.
Repeatedly comming