தமிழகத்தில் ஜூன் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை, அலுவலகங்கள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வரும் ஜூன் 24ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற இருக்கும் நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி மவுலீதுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து இந்த விழாவின் முக்கிய கொண்டாட்டமான கொடி ஊர்வலம் ஜூன் 11ம் தேதியன்று நடைபெற்றது. தவிர, இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23ம் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா துவங்கி ஜூன் 24ம் தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் ஜூன் 30ம் தேதி கொடியிறக்கத்துடன் இந்த விழா முடிவடையும்.
TN Job “FB Group” Join Now
இப்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 24ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏர்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.
இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 24ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும். இருப்பினும் ஜூன் 24ம் தேதியன்று அரசின் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.