தனியார் நிதி நிறுவன கடன் தொகை வசூல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கிருஷ்ணகிரி வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஆலோசனை கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. அதில் ‘தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்ய கடினப்போக்கை கடைபிடிக்க கூடாது’ என கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
நிதி நிறுவனங்கள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சிறு. குறு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ஏழை, எளிய மக்கள் தங்கள் வருமானத்தை இழந்து சிரமப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். தினக்கூலிகள் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தினம் – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
இந்நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதாக பல புகார்கள் எழுந்தது வருகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஆலோசனை கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறுகையில், மக்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்யும் போது கடினப்போக்கை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கடன் தவணையை செலுத்த அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கான கால அவகாசத்தை பின்பற்ற வேண்டும். மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் தகுதியான விவசாய கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.